தமிழ்
Call +94 74 092 7382

Chulipuram, Jaffna, Neerveli, Kokkuvil, Colombo
சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் கொழும்பு மற்றும் நீர்வேலி தெற்கைப் வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு - குமாரசாமி அவர்கள் 14.06.2025 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கதிரவேலு அன்னம்மா அவர்களின் அன்பு மகனும் காலஞ்சென்ற சின்னத்துரை பொன்னம்மா அவர்களின் அன்பு மருமகனும் இராசமலர் (மலர்) அவர்களின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற கமலேஸ்வரி, யோகேஸ்வரி, சிவசுப்பிரமணியம், நடராசா மற்றும் கமலாதேவி அவர்களின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற சுகித்தா மற்றும் சுரபி, சயந்தன், துர்க்கா குகதர்சினி (குமுதா) நந்தகோபி (நந்தா) ஆகியோரின் அன்புத் தந்தையும் சிவகுமார், சோபா, ரமேஸ், உதயகுமார், சுரேஸ் குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும், பிரவீனா, பிரவீமன், பாடினி, ஆருனி, சபிநயா, தனோ, அப்ஷனா, அனிர்வன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
ஈமக்கிரியைகள் கந்தசாமி கோவிலடி, நீர்வேலி தெற்கு, நீர்வேலியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் 22.06.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் நடைபெற்று 10.00 மணியளவில் நீர்வேலி தெற்கு இந்து மயானத்திற்கு தகனக் கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
கந்தசாமி கோவிலடி, நீர்வேலி தெற்கு, நீர்வேலி
தகவல் குடும்பத்தினர் 021 205 4847 077 780 6300