"அப்பா" என்று அழைக்க நீங்கள் இன்று அருகில் இல்லை ... உங்களை நினைக்கும்போது எங்கள் கண்கள் கலங்குகின்றன ... எங்கள் சந்தோஷத்தில் உங்கள் முகத்தைத் தேடுகிறோம் ... எங்கள் துயரத்தில் உங்கள் தோளைத் தேடுகிறோம் ... நேர்கொண்ட பார்வையும் நிறைவான நற்பண்பும் யார்கண்டும் உரையாடும் நகைபூத்த இன்முகமும் சீர்கொண்ட செல்வமும் சிறப்புமிகு மனைவி. மக்கள் பேர் சொல்லும் அளவிற்கு பெருவாழ்வு வாழ்க்கையிலும் கண்ணை இமை காப்பது போல் எமை காத்து நின்ற அப்பா நீங்கள் .. ஈராண்டும் ஓடிற்றோ ..... உங்களை நாமிழந்து! கண்ணீர்ப்பூக்களைக் காணிக்கையாக்கி ஆராதிக்கின்றோம் அப்பாவின் ஆத்மாசாந்திக்காக ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! இங்கனம் மனைவி, மகன்கள், மகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்