காரைநகர், நட்டுப்பாளியை பிறப்பிடமாகவும் ஆயிலி. பரந்தன் மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை கதிரவேலு அவர்கள் 18.08.2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை (செட்டியார்), செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற கார்த்திகேயனி (வசந்தி) அவர்களின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான பத்மநாதன். திரவியம் ஆகியோரின் அன்பு மருமகனும் Dr.சுதாகரன் (சத்யா), சுமதி (Sri Lanka), சுபாஸ்கரன் BEng (Hons)-(UK), சுபோதினி (UK) ஆகியோரின் பாசமிகு தந்தையும் தேவிகா (ஷைலா-Canada), காலஞ்சென்ற E.S.P. கணேசலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும் அச்சுதன் (Canada), உமாசுதன் (சச்சின்-Canada), சங்கவி (Canada), Dr.அபிராமி, செந்தூரன், வைஷிகா, ஆகாஷ் (UK). ஆர்த்தி (UK) ஆகியோரின் பாசமிகு பேரனும் காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், கனகசபை, தங்கம்மா மற்றும் பாலாமணி, கனகலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, வைத்திலிங்கம். நவரத்தினம் மற்றும் இராஜலட்சுமி. ஸ்ரீஸ்கந்தராஜா, காலஞ்சென்றவர்களான இராசமணி, சபாநாதன் மற்றும் சிவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 19.08.2026 இன்று புதன்கிழமை இல 11. பெதெஸ்டா வீதி, கொழும்பு 5 இல் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 20.08.2026 நாளை வியாழக்கிழமை மாலை 2 மணியளவில் இறுதி கிரியைகள் நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் என்பதை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். தகவல்: மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் தொடர்பு - சுபாஸ்கரன் - +447479914968, செந்தூரன் - 0776878187